ஃபிபா உலகக்கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் அர்ஜென்டினா அணி வெற்றிபெற்ற பின்னர் லாஸ் மால்வினாஸ் (las malvinas) தீவுகள் அர்ஜென்டினாவுக்கே சொந்தம் என எழுதப்பட்ட பதாகையை அர்ஜென்டினா வீரர்கள் சிலர் மைதானத்திலேயே தூக்கி காட்டினர்.
அர்ஜென்டினாவின் அருகில் உள்ள லாஸ் மால்வினாஸ் தீவுகள் தற்போது பிரிட்டனின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த தீவுகளை அர்ஜென்டினா நீண்ட நாட்களாக சொந்தம் கொண்டாடி வருகிறது. அதோடு இதற்காக பிரிட்டன் மற்றும் அர்ஜென்டினா இடையே போரும் நடந்துள்ளது.
இந்த சூழலில் அர்ஜென்டினா வீரர்கள் செய்த செயல் பிரிட்டனில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அர்ஜென்டினா அணியின் முக்கிய வீரர்களான லிசாண்ட்ரோ மார்டினெஸ் (lisandro martínez), கிறிஸ்டியன் ரொமெரோ (Cristian Romero) மற்றும் என்சோ பெர்னாண்டஸ் (Enzo Fernández) ஆகியோர் இங்கிலாந்தின் முக்கிய கிளப் அணிகளுக்காக ஆடி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த அர்ஜென்டினா வீரர்களை பிரிட்டனுக்குள் அனுமதிக்க கூடாது என அந்நாட்டின் வலதுசாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதோடு அர்ஜென்டினா வீரர்களை கிளப் அணியில் இருந்து நீக்கவேண்டும் என்றும் அவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். எனினும் கிளப் அணிகள் இதுபோன்ற செயல்களை செய்ய வாய்ப்பு இல்லை என்றே விளையாட்டு நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
இதனிடையே அர்ஜென்டினா வீரர்களின் இந்த செயல் குறித்து ஃபிபா அமைப்பும் ஆய்வு செய்து வருவதாகவும், குறிப்பிட்ட சில அர்ஜென்டினா வீரர்களுக்கு சில போட்டிகளில் தடை மற்றும் அபராதம் விதிக்கப்படவும் வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
ஸ்பெயினின் உலகக்கோப்பை ஆயுதம் | சிறுவர்களை சாம்பியனாக்கிய கிளப்.. மெஸ்ஸி உருவானதும் இங்குதான்!
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ மையத்தை குறிவைத்து புதிய ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையான IRGC பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம், தெஹ்ரான் மற்றும் வாஷிங்டன் இடையேயான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
ஈரான் - அமெரிக்காIRGC வெளியிட்ட தகவலின்படி, ஜோர்டான்-சிரியா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ வீரர்கள் தங்கியுள்ள வளாகம் இந்த தாக்குதலின் இலக்காக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “ஆபரேஷன் நஸ்ர் 2” என குறிப்பிடப்படும் சமீபத்திய தாக்குதல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் கூறியுள்ளது. இதற்கிடையில், மோதலின்போது உயிரிழந்த அமெரிக்க ராணுவ வீரர்கள் தொடர்பாக அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் பீட் ஹெக்செத் வெளியிட்ட கருத்துகளுக்கு IRGC கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் அணுகுமுறையை விமர்சிக்கும் வகையில், ஈரான் ராணுவ அமைப்பு கடுமையான அறிக்கையையும் வெளியிட்டுள்ளது.
ஆப்கன் அரசுக்கே ஆட்டத்தைக் காட்டிய புதிய தலிபான் எதிர்ப்புக் குழு.. மாவட்டத்தை கைப்பற்றி மிரட்டல்!மேலும், ஈரானின் ஏவுகணை தாக்குதல்கள் தொடர்ந்த நிலையில், ஜோர்டான் தலைநகர் அம்மானில் வான்வழி தாக்குதல் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிராந்தியத்தின் பல பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, அமெரிக்க ராணுவ தளங்களை கொண்டுள்ள நாடுகளை மையமாகக் கொண்டு பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பஹ்ரைனையும் குறிவைத்து ஈரான் புதிய தாக்குதல்களை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொடர் தாக்குதல்கள், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பு சூழலை மேலும் சிக்கலாக்கியுள்ளதாக சர்வதேச பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பசியால் வாடும் ஆப்பிரிக்க மக்கள்.. ஆசியாவின் நிலை என்ன? - ஐநா அறிக்கை
கடந்த 1 மாதங்களாக நீட் தேர்வு முறைகேட்டிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இளைஞர்கள், கூட்டத்தொடரின் முதல்நாளான நேற்று பேரணியில் ஈடுபட முற்பட்டனர். எனினும், அவர்களை தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகள் வீசி டெல்லி காவல்துறையினர் கட்டுப்படுத்தியிருந்தனர். இந்த தாக்குதலில், 100 மேற்பட்ட இளைஞர்கள் காயமடைந்திருக்கும் சூழலில், இந்த சம்பவம் டெல்லி மட்டுமின்றி இந்திய அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனினும், டெல்லியில் தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்இந்தசூழலில் தான், காவல்துறையின் தாக்குதலில் காயமடைந்த இளைஞர்களை சந்தித்து நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி நலம் விசாரித்தார். தொடர்ந்து, இன்று நாடாளுமன்றத்தில் 2-வது நாள் கூட்டம் தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சிகளின் அமளியால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இன்று மாலை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, எம்.பி பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்து பிரதமர் மோடி இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, நீட் தேர்வு முறைகேட்டிற்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் பதவி விலக வேண்டும் எனத் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். இந்தப் போராட்டம் 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து வந்த நிலையில், தற்போது ராகுல்காந்தியை காவல்துறை கைது செய்திருக்கிறது. அவருடன், பிரியங்கா காந்தி, அகிலேஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
ஏற்கனவே, இளைஞர்களின் போராட்டம், காவல்துறையின் தாக்குதல் என டெல்லி பதற்றமான சூழலில் இருந்து வரும் நிலையில், தற்போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டிருப்பது டெல்லியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
CJP போராட்டம்.. எதிர்க்கட்சிகள் அமளி.. 2 நாளாக முடங்கிய நாடாளுமன்றம்!!2025-ஆம் ஆண்டில் உலகளாவிய பசி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகக் குறைந்துள்ளதுடன், ஆசியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட அனைத்துக் கண்டங்களிலும் முன்னேற்றங்கள் பதிவாகியுள்ளன என உலகில் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தின் நிலை குறித்து ஐ.நா அமைப்புகள் இணைந்து தயாரித்த அறிக்கை ஒன்று தெரிவித்திருக்கிறது. எனினும், இது கோவிட் காலத்திற்கு முந்தைய நிலையை எட்டவில்லை எனவும் எச்சரித்திருக்கிறது.
அந்த அறிக்கையின் படி, 2025ஆம் ஆண்டில் உலகளவில் 64.5 கோடி மக்கள், அதாவது உலக மக்கள்தொகையில் 7.8 சதவீதம் பேர், பசியை எதிர்கொண்டுள்ளனர். இது 2024ஆம் ஆண்டில் இருந்த 65.9 கோடியிலிருந்து 1.4 கோடி குறைவு. மேலும் 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 4.3 கோடி பேர் குறைந்துள்ளனர் என அந்த அறிக்கை சுட்டிக் காட்டியிருக்கிறது.
”காசா முதல் சூடான் வரையிலும் அதற்கு அப்பாலும் மோதல்கள் தொடர்ந்து பசியைத் தூண்டுகின்றன. பசியானது எதிர்கால ஸ்திரத்தன்மையின்மையை மேலும் வளர்த்து, அமைதியைக் குலைக்கிறது" என்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், நேற்றைய தினம் எத்தியோப்பியாவில் நடைபெற்ற ஐ.நா. உணவு உச்சி மாநாட்டில் உரையாற்றியிருந்த நிலையில் இந்த அறிக்கை வெளியாகியிருக்கிறது.
ஆப்கன் அரசுக்கே ஆட்டத்தைக் காட்டிய புதிய தலிபான் எதிர்ப்புக் குழு.. மாவட்டத்தை கைப்பற்றி மிரட்டல்!ஆப்பிரிக்காவில் 5-ல் ஒருவருக்கு ஊட்டச்சத்து குறைபாடுஇந்த அறிக்கையின் படி, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்கா – கரீபியன் நாடுகள் பசியைக் குறைப்பதில் முன்னேற்றம் கண்டுள்ளன. ஆனால் ஆப்பிரிக்கா இன்னும் பசி மற்றும் ஊட்டச்சத்து அதிகமாக கண்டமாகவே உள்ளது. 2025ஆம் ஆண்டில் ஆப்பிரிக்காவில் பசியின் விகிதம் 20.3 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக சிறிதளவு குறைந்தாலும், மக்கள்தொகை அதிகரித்ததால் பசியால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துள்ளது. அதன்படி, இதில் 309 மில்லியன் மக்கள், அதாவது ஐந்து ஆப்பிரிக்கர்களில் ஒருவர் பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
2030ஆம் ஆண்டுக்குள் உலகளவில் ஊட்டச்சத்து குறைபாடு கொண்டவர்களின் எண்ணிக்கை தற்போது இருப்பதை விட 20 சதவீதம் வரை குறையும் என்று ஐ.நா. கணித்துள்ளது. இருந்தாலும், 51 முதல் 52 கோடி மக்கள் வரை இன்னும் பசியுடன் வாழ நேரிடும் என்றும், அதில் 56 சதவீதம் பேர் ஆப்பிரிக்காவில் இருப்பார்கள் என்றும் அறிக்கை கூறுகிறது.
ஆசிய முன்னேற்றத்தில் இந்தியாவின் பங்குமேலும், ஆசியாவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தின் பெரும்பகுதி, உலகின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கைக் கொண்ட நாடான இந்தியாவில் குவிந்துள்ளது எனவும்அங்கு, இலக்கு வைக்கப்பட்ட நலத்திட்டங்கள் மற்றும் அதிகரித்து வரும் விவசாய உற்பத்தித்திறன் ஆகியவற்றின் கூட்டு உதவியால், பசி 10%க்கும் கீழ் குறைந்துள்ளது என அந்த அறிக்கை சுட்டிக் காட்டியிருக்கிறது.
ஆரோக்கியமான உணவு இல்லாத 32.7% சதவீதம் பேர்ஆரோக்கியமான உணவை வாங்க முடியாத மக்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது என ஐநாவின் அறிக்கை தெரிவித்திருந்தாலும், உலக மக்கள்தொகையில் 32.7 சதவீதம் பேருக்கு இன்னும் சத்தான உணவு எட்டாத ஒன்றாகவே உள்ளது என அறிக்கை கவலை தெரிவித்துள்ளது.
அதன்படி, ஆசியாவில் 140 கோடி பேர், ஆப்பிரிக்காவில் 103 கோடி பேர், லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதியில் 17.2 கோடி பேர், ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் 7.75 கோடி பேர், ஓஷியானியாவில் 23 லட்சம் பேர் ஆரோக்கியமான உணவை வாங்க முடியாத நிலையில் உள்ளனர். குறிப்பாக ஆப்பிரிக்காவில் மக்கள் தொகையின் மூன்றில் இரண்டு பங்கு, அதாவது சுமார் 66 சதவீதம் பேர், சத்தான உணவை வாங்க முடியாத சூழலில் உள்ளனர்.
ஊட்டச்சத்து குறித்து ஐநா வரையறைஐ.நா. மற்றும் உலக வங்கி வரையறையின்படி, ஒரு ஆரோக்கியமான உணவுக் கூடை என்பது ஒரு நபருக்குத் தினமும் சுமார் 2,330 கிலோகலோரி சக்தியையும், தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களையும் வழங்கும் வகையில், உள்ளூரில் கிடைக்கும் ஆறு உணவுக் குழுக்களில் இருந்து 11 வகை உணவுப் பொருட்களை குறைந்த செலவில் கொண்டிருக்கும் உணவுத் தொகுப்பாகும்.
இந்தசூழலில் தான், சர்வதேச மோதல்கள், பொருளாதார அதிர்வுகள், காலநிலை மாற்றம் மற்றும் 2026ஆம் ஆண்டில் ஏற்பட்ட புதிய புவிசார் அரசியல் பதற்றங்கள் போன்றவை, உலகின் பசி ஒழிப்பு முயற்சிகளை மீண்டும் பாதிக்கக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
உலகின் மகிழ்ச்சியான நகரங்கள்.. 6ஆவது இடம்பிடித்த இந்தியாவின் இளஞ்சிவப்பு நகரம்!விரைவில் புதிய தலைமுறையில் புதிய தொடர்கள்!உங்களுக்குப் பிடித்தமான எழுத்தாளர்கள் எழுதும் மனதைக் கவரும் தொடர்கள், விரைவில் நமது ’புதிய தலைமுறை’யில் இணையதளத்தில் வெளிவர இருக்கிறது. அந்த வகையில், திங்கள்தோறும் பி.கே.பழனிக்குமார் எழுதும் ’ஒரு மருந்து விற்பனைப் பிரதிநிதியின் டைரிக்குறிப்பு’ம், புதன்தோறும் டாக்டர் வி.அமுதன் எழுதும் ’சக்கரங்கள் சொல்லும் கதை’யும், வெள்ளிதோறும் சுகுணா திவாகர் எழுதும் ’நிறம் மாறும் சினிமா’ ஆகிய தொடரும் இடம்பெற இருக்கிறது.
கச்சா எண்ணெய்க்காக வெளிநாடுகளைச் சார்ந்திருப்பதை குறைக்கவும், கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்கவும் பெட்ரோலில் எத்தனாலைக் கலக்க கடந்த 2014-ஆம் ஆண்டு மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக 2014-ஆம் ஆண்டு பெட்ரோலில் 1.5 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்டது.
தொடர்ந்து இந்த விகிதம் அதிகரித்து வந்த நிலையில், கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பெட்ரோலில் 10 சதவீதம் எத்தனால் கலப்பு என்ற இலக்கு எட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலக்க இலக்கு நிர்ணயித்து மத்திய அரசு செயல்பட்டு வந்தது.
2030-ஆம் ஆண்டுக்குள் இந்த இலக்கை எட்ட மத்திய அரசு முடிவு செய்த நிலையில், 4 ஆண்டுக்கு முன்னதாகவே, அதாவது 2026-ஆம் ஆண்டே இந்த இலக்கை மத்திய அரசு எட்டியது. இதன்படி, ஒரு லிட்டர் எரிபொருளில் 200 மில்லி லிட்டர் எத்தனால் கலந்து விற்பனை செய்யப்படுகிறது. இதனிடையே பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் வாகனங்கள் அடிக்கடி பழுதாகுவதாகவும் தொடர்ந்து விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. அதோடு, விரைவில் பெட்ரோலில் எத்தனால் அளவை 22 சதவீதம் முதல் 30 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும், விரைவில் இது அமலுக்கு வரும் என்றும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், இதுகுறித்து மத்திய அரசு பதிலளித்துள்ளது. மாநிலங்களவையில் இதுகுறித்த கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி, ”தற்போதைய சூழலில் பெட்ரோலில் எத்தனால் கலப்பை 20 சதவீத வரம்பிற்கு மேல் உயர்த்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை” என்று கூறியுள்ளார்.
மேலும், ”எதிர்காலத்தில் எத்தனால் கலப்பை 20 சதவீதத்துக்கு மேல் உயர்த்துவது பற்றி யோசித்தாலும், அது உடனடியாக அமலுக்கு வராது என்றும், விரிவான அறிவியல், தொழில்நுட்ப ஆய்வுகளை நடத்தி, வாகன உற்பத்தியாளர்கள், எண்ணெய் நிறுவனங்களுடன் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தியபின்னரே அமலுக்கு வரும்? என்றும் அவர் கூறியுள்ளார்.
ஸ்பெயினின் உலகக்கோப்பை ஆயுதம் | சிறுவர்களை சாம்பியனாக்கிய கிளப்.. மெஸ்ஸி உருவானதும் இங்குதான்!
நாடுகளில் உள்ள பல நகரங்களில் சில நகரங்கள் மட்டும், ஏதோ ஒன்றுக்காக அதன் பட்டியலில் இணைந்துவிடுகிறது. அந்த வகையில், உலகின் மகிழ்ச்சியான நகரங்கள் என்ற சமீபத்திய தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் ஒரு மதிப்புமிக்க நகரமும் அதில் இடம்பிடித்துள்ளது. அது, ராஜஸ்தானின் தலைநகரான ஜெய்ப்பூர் ஆகும். டைம் அவுட் வெளியிட்ட , 2026-ஆம் ஆண்டுக்கான உலகின் மகிழ்ச்சியான நகரங்கள் பட்டியலில்தான், இந்த நகரம் முதல் பத்து இடங்களுக்குள் நுழைந்துள்ளது. அந்தப் பட்டியலில் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ள இந்த இளஞ்சிவப்பு நகரம், அதன் செழுமையான தேசி உணவு, புகழ்பெற்ற அடையாளச் சின்னங்கள் ஆகியவற்றிற்காகப் பிரபலமானது.
மேலும், இது வடஇந்திய மக்களால் மிகவும் விரும்பப்படும் வார இறுதிப் பயணங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. இந்தப் பட்டியலில், ஒவ்வொரு நாட்டிலிருந்தும் மிக உயர்ந்த தரவரிசை பெற்ற நகரம் மட்டுமே இறுதி முதல் 20 இடங்களுக்குள் இடம்பெற்றது. இந்த ஆண்டு பட்டியலில் ஐக்கிய ராஜ்ஜியத்தின் பாத் முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து பனாமாவின் பனாமா சிட்டி, மெக்சிகோவின் குவாடலஹாரா, கொலம்பியாவின் மெடலின் மற்றும் போலந்தின் கிராகோவ் ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. 24,000 மக்களிடம் ’டைம் அவுட்’ நடத்திய வருடாந்திர உலகளாவிய கணக்கெடுப்பின்போது நகரங்களின் இரவு வாழ்க்கை, உணவு, சமூக உணர்வு, காதலைக் கண்டறிவது எவ்வளவு எளிது, மற்றும் அந்த நகரம் தங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறதா என்பது போன்ற பல கேள்விகள் கேட்கப்பட்டன.
இதையும் படிக்க: ஆப்கன் அரசுக்கே ஆட்டத்தைக் காட்டிய புதிய தலிபான் எதிர்ப்புக் குழு.. மாவட்டத்தை கைப்பற்றி மிரட்டல்!
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பைத் தொடருக்காக, ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார், இந்திய அணியின் ஹிட் மேன் ஆன ரோகித் சர்மா. சமீபத்தில்கூட இங்கிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் சொதப்பிய நிலையில், மூன்றாவது சதமடித்து சாதனை படைத்தார். மேலும், அவரது ஓய்வு குறித்து விமர்சித்தவர்களுக்கும் தன்னுடைய ஆட்டத்தாலேயே பதிலடி கொடுத்தார். ஆனால், அதற்கு முன்னதாகவே ரோகித்தின் ஓய்வு குறித்த வதந்திகளுக்கு பிசிசிஐ மறுப்பு தெரிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல், இதே தொடரில் முதல் போட்டியில் சொதப்பிய விராட் கோலி, அடுத்த இரண்டு போட்டிகளிலும் அரைசதம் அடித்து மிரட்டினார்.
rohit, viratஇந்த நிலையில்தான், அவர்களது ஆட்டம் குறித்து பலரும் புகழ்ந்து வருகின்றனர்.
‘வயசானாலும் உங்க ஆட்டம் போகல..’ Eng. மண்ணில் மிரட்டிய விராட், ரோகித்.. இனிமேல் ஆடுவது எப்போது?அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், “ரோகித் சர்மா, விராட் கோலி விளையாட விரும்பினால், அவர்களது இடத்தை யாராலும் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது. அதற்கு முதல் காரணம், அவர்களின் அசாத்தியமான ரன் குவிப்பு. ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளில் கிட்டத்தட்ட 12,000 ரன்களைக் குவித்துள்ளார். இத்தகைய இமாலய சாதனைகளைப் படைத்த ஒரு வீரரை யாராலும் அணியில் இருந்து நீக்க முடியாது. இரண்டாவது காரணம், அவர்கள் பேட்ஸ்மேன்கள்.
அஸ்வின்அவர்களுக்குப் பின்னால் ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. மைதானத்திற்கு ரசிகர்கள் அவர்களைப் பார்க்கவே வருகிறார்கள். அவர்களை நீக்கினால் ரசிகர்கள் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்துவார்கள். பந்துவீச்சாளர்களுக்காகவும் ரசிகர்கள் இதேபோல் கொந்தளிக்கும் ஒருநாள் வந்தால், அவர்களையும் அணியில் இருந்து நீக்குவது கடினமாகிவிடும்" எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக, டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா அழுத்தம் காரணமாகவே ஓய்வு பெற்றார்கள் என்ற சர்ச்சை எழுந்தது.
“சதமடிச்சது ரோகித்துதான்; ஆனா..” - ‘படையப்பா’ வசனத்துடன் கெத்து காட்டிய ஷர்துல் தாக்கூர்!
முதல்வர் விஜயை அவதூறாகவும் மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசிய வழக்கில் கைதான விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணையின் போது சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுவெளியில் எப்படி பேசவேண்டும் என்ற வழிமுறைகள் உள்ளதாகவும், அதனை மீறி இப்படி பேசுவது சரியானது அல்ல என்று நீதிபதி சுமதி கருத்து தெரிவித்தார். அதனையடுத்து அவர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் தான், நீதிமன்றக் காவலில் உள்ள திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை பாளையங்கோட்டை மத்திய சிறையில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பியுமான கனிமொழி தற்போது சந்தித்து நலம் விசாரித்துள்ளார். அப்போது அவருடன் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் உள்ளிட்ட திமுகவினர் உடனிருந்தனர்.
தொடர்ந்து, சிறை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியிருக்கும் எம்.பி. கனிமொழி முதல்வர் விஜய் குறித்து கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.
திமுக எம்எல்ஏவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்.. பாளையங்கோட்டை சிறையில் அடைப்பு.!இதுகுறித்து அவர் பேசுகையில், ”சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் நலமாக இருக்கிறார் எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் எதிர்கொள்ள திமுகவினர் தயார். அதேசமயம், பாளையங்கோட்டை சிறை திமுகவினருக்குப் புதிதல்ல; இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்காக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். திமுகவினர் யார் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டாலும் அவர்கள் அதனைப் பெருமையாகவே கருதுவார்கள். அரசை விமர்சிக்கும் நபர்களை ஒவ்வொரு முறையும் சிறைக்கு அனுப்பும் முயற்சி நடைபெற்று வருகிறது.
விஜய் - கனிமொழிஏற்கனவே, அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் இந்த அச்சுறுத்தல் வந்தது. தவெக அரசு ஜனநாயகத்தின் மீது அக்கறையின்றி செயல்படுகிறது. மேலும், காவல்துறையை எதிர்க்கட்சிகளை அடக்குவதற்கு மட்டுமே பயன்படுத்துகிறது” என குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், தன்னை விமர்சிப்பவர்களின் கருத்துகளை ஏற்றுக்கொள்ளும் மனநிலை ஆட்சியாளர்களிடம் இல்லை எனவும் பாஜகவுக்கு பயந்து கொண்டு தவெகவினர் ஆட்சி செய்கிறார்கள் எனவும் மோடியின் வழியில் தான் தவெக அரசு செயல்பட்டுவருகிறது எனவும் முதல்வர் விஜய் குறித்து எம்.பி. கனிமொழி மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
கரூர்: அரசு வேலை வழங்கியதை எதிர்த்த வழக்கு.. ஜூலை 24க்குள் பதில் அளிக்க அரசுக்கு உத்தரவு!
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சியை எதிர்த்துப் போராடும் 'செபஹியான்-இ மீஹான்' (Sepahian-e Mihan) என்ற புதிய தலிபான் எதிர்ப்பு ஆயுதக் குழு, பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள மாவட்டத்தைக் கைப்பற்றிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் ஏற்கெனவே எல்லைப் பிரச்னை காரணமாக அவ்வப்போது தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. அதிலும் தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு, இருதரப்பிலும் கடுமையான கருத்து மோதலும் நிலவி வருகிறது. இந்த நிலையில், தலிபான்கள் ஆட்சிக்கு எதிராகவே இன்னொரு புதிய அமைப்பு முளைத்து, அதற்கு எதிராய்ச் சவால்விடும் அளவுக்கு வளர்ந்துள்ளது. தலிபான் எதிர்ப்புப் போராளிகள் குழுவான செபஹியான்-இ மீஹான், தேசத்தின் வீரர்கள் என அழைக்கப்படுகிறது. இந்தக் குழுவின் தளபதியாக அப்துல் கையூம் மலங் (Abdul Qayum Malang) உள்ளார். இவர் முன்னாள் ஆப்கான் சிறப்புப் படை அதிகாரியாகப் பணியாற்றியவர் ஆவார்.
தலிபான்இந்த நிலையில்தான், வடகிழக்கு ஆப்கானிஸ்தானின் படாக்ஷான் (Badakhshan) மாகாணத்தில் உள்ள யாஃப்தால்-இ பயீன் (Yaftal-e Paeen) மாவட்ட நிர்வாக தலைமையகத்தை இந்தக் குழு கைப்பற்றியது.
இந்த மாவட்டம் மாகாணத் தலைநகரான பைசாபாத்தில் (Faizabad) இருந்து வெறும் 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது பாகிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் சீன எல்லைகளுக்கு அருகில் இருக்கும் மலைப்பாங்கான பகுதி என்பதால், தலிபான் எதிர்ப்புப் படைகள் இங்கு நிலைகொண்டுள்ளன. இந்தச் சூழலில்தான் இப்போராளிகள் திடீரென மாவட்டத்தின் நிர்வாக அலுவலகங்கள், காவல் தலைமையகம் மற்றும் உளவுத்துறை அலுவலகங்கள் மீது ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்தி, அங்கிருந்த தலிபான் படைகளை ஆயுதங்களை இழக்கச் செய்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மேலும், மாவட்டத்தில் இருந்த தலிபான்களின் கொடியை இறக்கி, தங்களது இயக்கத்தின் புதிய நீல நிறக் கொடியை ஏற்றி தங்களின் கட்டுப்பாட்டைப் பறைசாற்றினர். 2021 ஆகஸ்ட்டில் தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, தலிபான் எதிர்ப்புப் போராளிகள் குழு ஒன்று ஒரு மாவட்டத் தலைமையகத்தை தற்காலிகமாகவேனும் கைப்பற்றியது இதுவே முதல்முறையாகும். வார இறுதி விடுமுறை (ஜூலை 17) காரணமாக, மூத்த அதிகாரிகள் வெளியில் இருந்த நேரத்தைப் பயன்படுத்தி இத்தாக்குதலை நடத்தியதாக தலிபான் தரப்பில் கூறப்பட்டது. எனினும், தலிபானின் கூடுதல் படைகள் அனுப்பப்பட்ட பிறகு, போராளிகள் அங்கிருந்து பின்வாங்கியதாகவும், சில மணிநேரங்களிலேயே மாவட்டத்தை மீண்டும் தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.